Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4.80 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார்.
அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், வாரணாசியின் முக்கிய வீதிகளில் வழிநெடுக நின்ற தொண்டர்களுக்கு, காரில் இருந்தபடி நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி வருகையையொட்டி, பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும் பிரதமர் மோடி, பின்னர் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகிறார். அங்கு குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடக்கும் நலத்திட்டங்களையும் பார்வையிட இருக்கிறார்.